பிரசாதத்தில் போதைப்பொருள் கலந்துகொடுத்து பெண் பாலியல் வன்கொடுமை: சாமியார் பாபா பாலக்நாத் மீது வழக்கு


ராஜஸ்தான்: ஒரு கோயிலில் சாமியார் பாபா பாலக்நாத், பிரசாதத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலின் சாமியார் பாபா பாலக்நாத், கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் வீடியோ இந்த மாதம் வைரலானது.

பாபா தனது குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி தனக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் சாமியார் அந்த பெண்ணுக்கு சாப்பிட ஒரு "பிரசாதம்" கொடுத்துள்ளார். அது அப்பெண்ணின் பிரச்சனைகளை தீர்க்கும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், அந்த பிரசாதத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்டிருந்தது. அதை சாப்பிட்ட பிறகு அப்பெண்ணை சாமியார் மூன்று முறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை பாபாவின் ஓட்டுநர் கேமராவில் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அப்பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​பாபாவும் அவரது உதவியாளர்களும் அவரை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும், அந்த வீடியோவை வைரலாக்குவோம் என்றும் அவர்கள் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் தற்போது சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

x