ரத்தன் டாடா மறைவு: துக்கத்தில் இந்திய தொழில்துறை


மும்பை: டாடா சன்ஸ் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொழில் துறையினர் மற்றும் மக்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

86 வயதான ரத்தன் டாடா, புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வயோதிகம் சார்ந்த உடல்நிலை பாதிப்பால் அவர் உயிரிழப்பு.

‘நண்பர், ஆலோசகர், வழிகாட்டி’ என ரத்தன் டாடா மறைவு குறித்த அறிக்கையில் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ‘டைட்டன்’ என ரத்தன் டாடாவை குறிப்பிட்டு ஹர்ஷ் கோயங்கா இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல்.

x