திரிணமூல் எம்.பி.ஜவஹர் பதவி விலகினார்


புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜவஹர் சிர்கார் சமீபத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

அதில், “பெண் மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே எம்.பி.பதவியை ராஜினாமா செய்யமுடிவு செய்துள்ளேன்” என கூறியிருந்தார்.

இந்த சூழலில், ஜவஹர் சிர்கார் நேற்று தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 12 ஆக குறைந்துஉள்ளது

x