துபாயில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி


மலப்புரம்: துபாயில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதால், அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

துபாயில் பணியாற்றும் 38 வயது நபர் துபாயில் இருந்து கேரளாவின் மலப்புரம் மாவட்டத்துக்கு சமீபத்தில் வந்தார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதனால் அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைபெற்று வந்தார். காய்ச்சல் குணமாகாததால், மாஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தன.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், முடிவுகள் வெளியானவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்

x