வீட்டுக்கு புதிய வரவான கன்றுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி


புதுடெல்லி: பிரதமர் மோடியின் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பசு, கன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் லோக் கல்யாண் மார்க்கில் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ளது. இந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பசு ஒன்று நேற்று கன்றை ஈன்றுள்ளது. இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காவ் சர்வ சுக் பிரதா என்று நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது - காவ் சர்வசுக் பிரதா என்றால் அனைத்து மகிழ்ச்சிக்கும் சாட்சி என்று அர்த்தம். லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் சுபமாக வருகை தந்துள்ளார். அன்புக்குரிய தாய் பசு, நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் புதிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அதனால், அதற்கு ‘தீபஜோதி' என்று பெயர் வைத்துள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி அதில் கூறியுள்ளார்.

மேலும், கன்றுக்குட்டிக்கு பிரதமர் மோடி முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

x