போர்ட் பிளேர் ‘ஸ்ரீவிஜயபுரம்’ என பெயர் மாற்றம்


புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்ட பதிவில், “நம் நாட்டை காலனிய எச்சத்திலிருந்து விடுவிக்கும் பிரதமர் மோடியின் நோக்கத்தின் அடிப்படையில், அந்தமான் நிக்கோபர் தலைநர் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்றப்படுகிறது. போர்ட்பிளேர் என்பது காலனிய நீட்சியாக உள்ளது. ஸ்ரீ விஜயபுரம் என்பது சுதந்திரபோராட்டத்தில் இந்தியாவின் வெற்றியைக் குறிக்கிறது. அந்தப்போராட்டத்தில் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் பங்களிப்பு முக்கியமானது. அதை வெளிப்படுத்தும் விதமாகவே ஸ்ரீ விஜயபுரம் என்றுபெயர் மாற்றப்படுகிறது.

சோழர் கால ஆட்சியில் அந்தமான் நிக்கோபர் முக்கியமான கடற்படைத் தளமாக இருந்துள்ளது. இன்று நம் நாட்டின் வளர்ச்சிக்குஇப்பிராந்தியம் முக்கிய களமாகவிளங்குகிறது. நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய வீர்சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குள்ளசெல்லுலார் சிறையில்தான் அடைக்கப்பட்டனர்” என்றார்.

x