ம.பி.யில் கனமழை: சுவர் இடிந்ததில் 7 பேர் உயிரிழப்பு


போபால்: மத்திய பிரதேசத்தின் டாட்டியா நகரில் கனமழை காரணமாக ஒரு வீட்டுக்கு அருகில் இருந்த பழமையான சுவர் இடிந்து, அந்த வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீட்டில் இருந்த 9 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடந்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். இதில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்

x