டெல்லி, உ.பி.யில் 3 நாட்களுக்கு கனமழை


புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று காலையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய இந்தியாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உத்தராகண்ட், டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. ஹரியானாவில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

x