காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் படையினர் நேற்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து எல்லை பாதுகாப்பு படை வீரர் காயம் அடைந்தார். இதையடுத்து எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் இறங்கினர்.

இந்நிலையில் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள உதம்பூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ராணுவத்தினரும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் சிறப்பு படையினரும் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்

x