ஐசியு-வில் சிகிச்சை பெறும் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: வார்டு பாய் கைது


மும்பை: தானே மாவட்டம் பிவாண்டி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் நோயாளியை 24 வயது வார்டு பாய் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பிவாண்டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 வயதான இளம்பெண் வயிற்றில் தொற்று இருப்பதாக ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கே பணிபுரியும் வார்டு பாய் மெஹபூப் ஆஸ்முகமது ஆலம், திங்கள் கிழமை அதிகாலை 4 மணியளவில், வார்டுக்குள் நுழைந்து, இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். மேலும், திருமணம் செய்துகொள்ளுமாறும் அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 74 கீழ் எப்ஐஆர் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யபட்டார் என்று பிவாண்டி நகர காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் மஹதோ கும்பார் தெரிவித்தார். இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

x