மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!


உத்தர பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் ஜபல்பூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலையில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இந்தூர் ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு திடீரென கீழிறங்கின. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினா். ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி விபத்திற்குள்ளான நிலையில், அந்த வழித்தடத்தில் ரயில்கள் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் “இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் (22191) இரண்டு பெட்டிகள் ஜபல்பூர் நிலையத்தின் 6 ஆவது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது” என்றனர்.

x