ஹைதராபாத்தில் மாணவர்களுக்கு விஸ்கி ஐஸ்கிரீம் விற்கும் கும்பல் கைது


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கும் கும்பல், தற்போது ஐஸ்கிரீம்களில்சாக்லெட், வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, பிஸ்தா, பட்டர் ஸ்காட்ச்போன்ற விதவிதமான சுவைகளில் 60 மில்லி விஸ்கியைஊற்றி கலக்கி விற்று வருகின்றனர்.

இதனை அறிந்த ஹைதராபாத் கலால் பிரிவு அதிகாரிகள், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 2 இடங்களில் உள்ள ‘அரிகோ கேஃப் ஐஸ் பார்லர்’ களில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 11.5 கிலோ எடையுள்ள 23 விஸ்கி ஐஸ்கிரீம்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஷரத் சந்திராரெட்டி, தயாகர் ரெட்டி, ஷோபன் ஆகியோரை கைது செய்தனர்

x