தெலங்கானாவில் என்கவுன்டர்: 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை; தலைவரும் உயிரிழப்பு


ஹைதராபாத்: தெலங்கானாவின் பத்ரத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் இன்று நடந்த என்கவுன்டரில் ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்டுகளின் தலைவரும் கொல்லப்பட்டுள்ளார்.

கரககுடெம் மண்டலத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதைப் பற்றிய தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினர் இன்று அதிகாலையில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். இதில் காவல்துறையின் கிரேஹவுண்ட்ஸ் குழுவுக்கும், சிபிஐ மாவோயிஸ்டுகளின் லச்சன்னா குழுவிற்கும் இடையில் நிலத்ரி பெட்டாவின் வனப்பகுதியில் மோதல் நடந்தது.

இதில் ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகவும், கிரேஹவுண்ட்ஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் மாவோயிஸ்டு குழுவின் தலைவரான லச்சன்னாவும் உயிரிழந்துள்ளார். மானுகுரு பகுதி குழுவின் செயலாளராக இருக்கும் லச்சன்னா தலைமையிலான லச்சன்னா மாவோயிஸ்டு குழு இப்பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. லச்சன்னா சமீபத்தில் சத்தீஸ்கரிலிருந்து தெலங்கானாவுக்கு இடம்பெயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறிய காவல்துறையினர் தேடல் நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளனர். அனைத்து அண்டை மாவட்டங்களும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

x