ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... விசாகப்பட்டினத்தில் அவசரமாக தரையிறக்கம்!


விசாகப்பட்டினம்: டெல்லியிலிருந்து விசாகப்பட்டினம் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த விமானத்தில் 107 பயணிகள் பயணம் செய்தனர்.

புது டெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குனர் எஸ் ராஜா ரெட்டி கூறுகையில், ‘ இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக டெல்லி காவல்துறைக்கு மிரட்டல் அழைப்பு வந்தது. இதனையடுத்து விமான நிறுவனம் மற்றும் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்பிறகு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டு பயணிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. முழுமையாகச் சரிபார்த்ததில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது கண்டறியப்பட்டது" என்று கூறினார்.

x