ஹரியானா தேர்தல் அக்டோபர் 5-ம் தேதிக்கு மாற்றம்


புதுடெல்லி: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்நாளில் பிஷ்னோய் சமுதாய மக்களின் பாரம்பரிய ‘ஆசோஜ்’ அமாவாசை திருவிழா வருவதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பிஷ்னோய் சமூக பிரதிநிதிகள் மனு அளித்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், ஹரியானா தேர்தல் தேதியை அக்.1-ல் இருந்து அக்டோபர் 5-ம் தேதிக்கு மாற்றியது. இதனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் தேதி அக்டோபர் 4-ல் இருந்து அக்டோபர் 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

x