மயக்க மருந்தால் மும்பை பெண் காவலர் மரணம்


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை காவல் துறையில் காவலராக பணியாற்றி வந்தவர் கவுரி சுபாஷ் பாட்டீல் (28). அந்தேரி மரோல் பகுதியில் உள்ளூர் ஆயுதப் படை பிரிவில் இவர் பணியாற்றி வந்தார்.

இவர் காதில் ஏற்பட்ட பிரச் சினைக்காக அந்தேரி மேற்கு புறநகர் பகுதியில் உள்ள ஆக்சிஸ் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து தரப்பட்டுள்ளது. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட கவுரி நேற்று முன்தினம் உயிரி ழந்தார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “உயிரிழப்புக்கான காரணத்தை அறிய கவுரியின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தற்செயல் மரணமாக அந்தேரி, மரோல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்

x