அருணாசலில் லாரி கவிழ்ந்து 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு


இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து இடாநகர் காவல் துறையினர் கூறியுள்ளதாவது: அருணாசல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் நேற்று ராணுவ வீரர்கள் பயணம் செய்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு வீரர்கள் காயமடைந்தனர்.

உயிரிழந்த 3 ராணுவ வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. ஹவல்தார் நகாத்சிங், நாயக் முகேஷ் குமார், கிரெனேடியர் ஆஷிஷ் ஆகியோரின் உயிர் தியாகத்துக்கு ராணுவத்தின் கிழக்கு கமாண்டன்ட் இரங்கல் தெரிவித்துள்ளது. லெப்டி னன்ட் ஜெனரல் ஆர்.சி. திவாரியும் இரங்கல் தெரிவித்துள்ளார்

x