பேங்க் ஸ்டிரைக் அலர்ட்: வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்


சென்னை: அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று (ஆக.28) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் வங்கி சார்ந்த சேவைகளை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

வங்கி ஊழியர் சங்கத்தின் 13 அலுவலகப் பணியாளர்கள் மீது பேங்க் ஆப் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் இன்று மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தொழிற்சங்கத்தின் மீதான அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைக்கு எதிராக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று (ஆக.28) நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது” என எக்ஸ் தளத்தில் வெங்கடாசலம் ட்வீட் செய்துள்ளார்.

x