இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு: சாலைகள் சேதம்; 58 சாலைகள் மூடல் 


சிம்லா: ராம்பூர் துணைப்பிரிவின் தக்லோச் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக 30 மீட்டர் நீளமுள்ள சாலை முற்றிலும் சேதமானது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் மழை பெய்ததால் 58 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தின் 12 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் ஆகஸ்ட் 20ம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. மேகவெடிப்பு சம்பவத்தையடுத்து துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக துணை கமிஷனர் சிம்லா அனுபம் காஷ்யப் தெரிவித்தார்.

சம்பா, காங்க்ரா, சிம்லா மற்றும் சிர்மௌர் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையும், தோட்டங்கள், பயிர்கள், பாதிக்கப்படக்கூடிய கட்டமைப்புகள் மற்றும் குடிசை வீடுகளுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

சிம்லாவில் 19 சாலைகள், மண்டியில் 14, காங்க்ராவில் 12, குலுவில் 8, கின்னூரில் 3 மற்றும் சிர்மவுர் மற்றும் லாஹவுல் & ஸ்பிட்டி மாவட்டங்களில் தலா ஒரு சாலைகள் என மொத்தம் 58 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மழையினால் 31 மின்சாரம் மற்றும் நான்கு நீர் வழங்கல் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தின் மழைப் பற்றாக்குறை வெள்ளிக்கிழமை வரை 23 சதவீதமாக இருந்தது. இமாச்சலில் சராசரியான 513.5 மிமீக்கு பதிலாக 397.9 மிமீ மழையைப் பெற்றுள்ளது.

மழை தொடர்பான சம்பவங்களில் 120 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஜூன் 27 முதல் வெள்ளிக்கிழமை வரை மாநிலத்திற்கு சுமார் ரூ.1,129 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

x