பாக். பெண்ணை மணக்க போனில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தவர் கைது


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் பகுதியில் உள்ள பத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரஹ்மான்.இவருக்கு ஃபரீதா பானு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், குவைத்துக்கு பணிபுரிய சென்ற ரஹ்மான், அங்கு பாகிஸ்தானைச் சேர்ந்த வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து, குவைத்திலிருந்து செல்போன் மூலம் மனைவியை தொடர்புகொண்டு முத்தலாக் கூறி விவாகரத்தும் செய்துள்ளார்.

ஃபரீதா அளித்த புகாரின் அடிப்படையில், ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த ரஹ்மானை ஹனுமன்கர் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x