காவல் நிலையத்தில் பெண்ணைத் தாக்கிய பாஜக பிரமுகர்: வைரலாகும் வீடியோ


மகாராஷ்டிராவில் உள்ள காவல் நிலையத்தில் பாஜக தலைவர் ஒருவர், பெண்ணை அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூர் புறநகர் காவல் நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் தனது உறவினரான பாஜக தலைவர் ஷிவ்சந்திர தைடே மீது புகார் அளிக்க தனது மகன் மற்றும் மருமகளுடன் காவல் நிலையம் சென்றிருந்தார். அப்போது காவல் நிலையத்திற்கு வந்த பாஜக தலைவர் ஷிவ்சந்திர தைடே, புகார் கொடுக்க வந்த பெண்ணை அடித்து உதைத்துடன் கடுமையாக திட்டுகிறார்.

அதை அந்த பெண் செல்போனால் பதிவு செய்ய முயற்சி செய்கிறார். அதனால் கோபமடைந்த ஷிவ்சந்திர தைடே, செல்போனை பிடுங்கியதுடன் அந்த பெண்ணை அறைந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் மகன் தனது தாயை காப்பாற்ற முயன்றுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சியை சிவசேனா எம்எல்ஏ சுஷ்மா அந்தரே சமூக வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் நிலையத்திற்குள் புகுந்து பெண்ணை பாஜக தலைவர் தாக்கிய சம்பவம், மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x