பெண் பத்திரிகையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: அதிர்ச்சி வீடியோ!


காதலித்து திருமணம் செய்த கணவன் ஏமாற்றியதால் பெண் பத்திரிகையாளர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு பதிவு செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலம், புவனேஷ்வரைச் சேர்ந்தவர் மதுமிதா பரிதா(28). உள்ளூர் செய்தி ஊடகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், லிங்கபூர் பகுதியில் உள்ள கோயில் அருகே ரயில் தண்டவாளத்தில் மதுமிதா பரிதா நேற்று முன்தினம் இரவு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து மதுமிதா உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு கணவரால் ஏற்பட்ட இன்னல்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. அதில், காதலித்து திருமணம் செய்த தன்னை, கணவர் ஏமாற்றி வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் தன் கணவரால் ஏற்பட்ட இன்னல்கள் குறித்தும் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காதல் திருமணம் செய்த பத்திரிகையாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A post shared by journalist (@_madhumita_parida_chinu)

x