காதலியோடு கையும், களவுமாக சிக்கிய போலீஸ்காரர்: மனைவி எடுத்த அதிரடி ஆக்‌ஷன்


காதலியுடன் தனிமையில் இருந்த தலைமைக் காவலரை கையும், களவுமாக பிடித்த அவரது மனைவி, காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிர்வாரா காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிபவர் ராஜ்முஹம்மது. இவரது மனைவி பேகம், தேவதுர்கா காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ராஜ்முஹம்மது பணியாற்றும் காவல் நிலையம் எதிரே தனியார் மருத்துவமனை உள்ளது. இதில் பணியாற்றும் விவாகரத்தான செவிலியர் ஒருவருடன் ராஜ்முஹம்மதுவிற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்திற்கு செவிலியரை ராஜ்முஹம்மது அழைத்து வந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்திற்கு பேகம் கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து தலைமைக்காவலர் ராஜ் முஹம்மதுவை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனாலும், அவருக்கும் செவிலியருக்கும் இருந்த தகாத உறவு தொடர்ந்துள்ளது.

இதனால் அவர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்று ராஜ்முஹம்மதுவின் மனைவி பேகம் முடிவு செய்தார். சிர்வாரா நகரில் உள்ள ஒரு வீட்டில் தனது காதலியுடன் தலைமைக் காவலர் ராஜ்முஹம்மது நேற்று மாலை இருப்பது பேகத்திற்கு தெரிய வந்தது. அந்த இடத்திற்குச் சென்ற அவர், கதவை பூட்டுப் போட்டு பூட்டி விட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை தொலைபேசியில் அழைத்து விஷயத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், ராஜ் முகஹம்மது மற்றும் அவரது காதலியை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தனது கணவர் ராஜ்முஹம்மது மீது அவரது மனைவி பேகம், காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளது. இந்த சம்பவம் ராய்ச்சூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x