உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை பிரேசில் நீதிபதி பார்வையிட்டார்


புதுடெல்லி: பிரேசில் நாட்டை சேர்ந்த நீதிபதி ஆன்டனியோ ஹெர்மன் பெஞ்சமின். இவர் இம்மாதம் பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இவர் தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று உச்ச நீதிமன்றம் சென்றபிரேசில் நீதிபதி பெஞ்சமினை தலைமை நீதிபதி சந்திரசூட் வரவேற்றார். வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்திய தலைமை நீதிபதி சந்திரசூட், “நீதிபதி பெஞ்சமின் இந்தியாவின் சிறந்த நண்பர். அவர் பிரேசில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வரும் 22-ம்தேதி பதவியேற்கவுள்ளார். அவரை இங்கு வரவேற்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

அதன்பின் நீதிபதி பெஞ்சமின் தலைமை நீதிபதி சந்திரசூட் அருகில் அமர்ந்து வழக்கு விசாரணைகளை உன்னிப்பாக கவனித்தார

x