நொடிப்பொழுதில் தப்பிய சிறுவன்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி


சைக்கிளில் வேகமாக வந்த சிறுவன் விபத்தில் இருந்து தப்பிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய வருகிறது. இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் உள்ள சொருக்காலா கிராமத்தை சேர்ந்த சிறுவன் சைக்கிளில் வேகமாக வந்து சாலையை கடக்க முயற்சி செய்கிறான். அப்போது, சாலையில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதிய சிறுவன் தூக்கி வீசப்பட்டதால் வேகமாக வந்த பேருந்தில் சிக்காமல் தப்பினார்.

இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது வருகிறது. நொடிப்பொழுதில் சிறுவன் உயிர் தப்பிய காட்சி காண்போரை பதறவைத்துள்ளது. வீடியோவை பார்க்க...

x