இந்தியாவில் கரோனாவால் 13,166 பேர் பாதிப்பு; 302 பேர் உயிரிழப்பு


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 302 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 13,166 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,166 பேர் கரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 4,28,94,345 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,13,226 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து ஒரே நாளில் 26,988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 42246884 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.49% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.31% ஆக குறைந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,34,235 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது வரை 1,76,86,89,266 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 32,04,426 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x