டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை!


மாதிரிப் படம்

தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் இன்று காலை கனமழை பெய்திருக்கிறது. இன்று பகல் பொழுதில், டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

டெல்லியின் நரேலா, பவானா, அலிப்பூர், புராரி, கரவால் நகர், சீமாபுரி, சஃப்தர்ஜங் பகுதிகளிலும், ஹரியாணாவின் நார்நால், பவால், அவுரங்காபாத், ஹோடல் ஆகிய பகுதிகளிலும், உத்தர பிரதேசத்தின் ஷாம்லி, கந்த்லா, கதவ்லி, ஷகோடி டண்டா, ஹஸ்தினாபீர், சாந்த்பூர், தவுராலா, கேக்ரா, கிதோர், கர்முக்தேஸ்வர், பிலாகுவா, ஹாப்பூர், குலாட்டி, சிக்கந்த்ராபாத், புலந்த்ஷஹர், நந்த்காவ், பர்ஸானா ஆகிய பகுதிகளிலும், ராஜஸ்தானின் திஸாரா, கைர்தால், கோட்புட்லி, அல்வார், நகர், லக்‌ஷ்மண்கர் ஆகிய பகுதிகளிலும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும், மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

x