இந்தியா கேட்டில் நேதாஜிக்கு பிரம்மாண்ட சிலை!


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

"டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்" என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஜனவரி 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தின விழாவில் மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டன. இதில், மேற்கு வங்கம் சார்பில் அமைக்கப்பட்ட நேதாஜி படம் போடப்பட்ட அலங்கார ஊர்தியும் அடங்கும். இந்நிலையில், இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களில் முதன்மையான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் வரும் 23ம் தேதி வருகிறது. இதையொட்டி நேதாஜியின் 125-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட உள்ளது.

பிரதமர் மோடி

இந்நிலையில், டெல்லி ராஜபாதையில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒட்டுமொத்த நாடும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரம்மாண்டமான கிரானைட் சிலை அமைக்கப்படும். இது நேதாஜிக்கு இந்தியா செலுத்தக்கூடிய நன்றிக்கடனாகும்.

நேதாஜிக்கு பிரம்மாண்ட கிரானைட் சிலை அமைக்கும் பணி நிறைவடையும் வரை அந்த இடத்தில் நேதாஜியின் உருவம் மின் ஒளியில் திரையிடப்படும். அந்த மின் ஒளி வடிவிலான சிலையை நான் நேதாஜியின் 125-வது பிறந்தநாளான நாளை மறுதினம் திறந்துவைக்க உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

x