புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகாராஜ் காலமானார்


பண்டிட் பிர்ஜு மகாராஜ்

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ், இன்று காலமானார். அவருக்கு வயது 83.

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் நேற்றிரவு, டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். சமீப காலமாக, சிறுநீரகக் கோளாறு காரணமாக பண்டிட் பிர்ஜு மகாராஜ் டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

பிரபல கதக் நடனக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரான பண்டிட் பிர்ஜு மகாராஜ், தனது திறமைக்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படத்தில் 'உன்னைக் காணாத நான்' என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இந்தப் பாடலில் வரும் கதக் நடனத்தை பண்டிட் பிர்ஜு மகாராஜ்தான் நடனவடிவமைப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x