அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கரோனா தொற்று!


டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தனது வீட்டிலேயே தன்னை அவர் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து இன்று காலை ட்வீட் செய்த கேஜ்ரிவால், “எனக்குக் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகள் இருக்கின்றன. வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்; தொற்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என குறிப்பிட்டிருக்கிறார்.

x