ஏழைகளின் இரு சக்கர வாகனங்களுக்குப் பெட்ரோல் விலையில் 25 ரூபாய் குறைக்கப்படும்!


வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளுக்கு, அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கான பெட்ரோல் விலையில் 25 ரூபாய் குறைக்கப்படும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்திருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2019 டிசம்பர் 29-ல் முதல்வராகப் பதவியேற்ற ஹேமந்த் சோரன், இன்று அம்மாநில முதல்வராக இரண்டாவது ஆண்டை நிறைவு செய்கிறார்.

அதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை அறிவித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஜனவரி 26 முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

x