கரோனா வைரஸுடன் கோதாவில் குதிக்கும் ‘கொசு‘!


இந்தியாவில், கரோனா பரவலுக்குப் போட்டியாக டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பல இடங்களில் கரோனா இறங்குமுகத்திலும், டெங்கு ஏறுமுகத்திலும் காணப்படுகிறது.

நாட்டின் தலைநகரான டெல்லியே இதற்கு உதாரணம். டெல்லி அரசு, கரோனா நோயாளிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த படுக்கைகளில் 3-ல் ஒரு பங்கை டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்றவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஒதுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. அந்த அளவுக்கு, கொசுக்கடியால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகிறது.

தலைநகர் தரும் பாடம் தலையாயது! கரோனாவுக்கு இணையாக டெங்கு பாதிப்பிலிருந்தும் பாதுகாப்பாய் இருப்போம்.

x