குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வுக்கு புதிய பாடத்திட்டம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


சென்னை: குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபாலசுந்தர ராஜ் நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
டிஎன்பிஎஸ்சி-யின் 2024-ம்ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வு கால அட்டவணை கடந்த ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது, தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் பின்வரும் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in/English/scheme.html, www.tnpsc.gov.in/English/syllabus.html.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செயலாளர் கூறியுள்ளார்.

புதிய பாடத்திட்டத்தின்படி, குரூப்-2 முதன்மைத் தேர்வில்ஏற்கெனவே உள்ள பாடத்திட்டத்துடன் புதிதாக தமிழ் கலாச்சாரம், பண்பாடு, தொல்லியல்துறை ஆய்வுகள், திருக்குறள், சங்க இலக்கியம், தமிழகத்தில் நடந்த விடுதலை போராட்டங்கள், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைதொடர்பான பாடங்களும் இடம்பெற்றுள்ளன.

விரிவான விடை: இதேபோல, குருப்-2ஏ முதன்மைத் தேர்வு பாடத்திட்டத்தில் தமிழக நவீன வரலாறு, தமிழ்கலாச்சாரம், பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், சங்க இலக்கியம், தமிழக விடுதலை போராட்டங்கள், நுண்ணறிவுத்திறன், ரீசனிங்உள்ளிட்டவை தொடர்பான பாடங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தவகையில், குருப்-2 முதன்மைத் தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையில் நடைமுறைபடுத்தப்படும்.

மேலும், குருப்-2ஏ முதன்மைத் தேர்வானது கொள்குறிவகையில் (அப்ஜெக்டிவ் டைப்) அமைந்திருக்கும். இதன்படி, பாடத்திட்டங்களை படித்து தேர்வுகளுக்கு தயாராகும்படி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

x