அதிர்ச்சி... கனடாவில் மாரடைப்பால் உயிர் இழந்த 19 வயது பஞ்சாப் மாணவன்!


மன்ஜோத் சிங்(

கனடாவில் மேற்படிப்பிற்காக சென்ற பஞ்சாப்பைச் சேர்ந்த 19 வயது மாணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள கானூர் மாவட்டம், ஷம்பு குர்த் பகுதியைச் சேர்ந்தவர் மன்ஜோத் சிங்(19). இவர்மேற்படிப்பு படிப்பதற்காக ஆக.7-ம் தேதி கனடாவில் உள்ள சர்ரே நகருக்குச் சென்றிருந்தார்.

இந்த நிலையில் முதல் நாள் வகுப்புக்காக கல்லூரிக்கு மன்ஜோத் வந்துள்ளார். அப்போது கல்லூரியில் உள்ள கழிப்பறைக்கு அவர் வந்த போது மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தை கரம்ஜித் சிங் கூறுகையில், "கனடாவில் வசிக்கும் எங்கள் மருமகன் அமந்தீப் சிங்கிற்கு மன்ஜோத் மாரடைப்பால் உயிரிழந்ததாக போலீஸார் கூறியுள்ளனர். அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர 18 முதல் 20 லட்சம் வரை செலவாகும்.

ஏற்கெனவே பல லட்ச ரூபாய் கடன் வாங்கித்தான் என் மகனை வெளிநாட்டிற்கு மேற்படிப்பு படிக்க அனுப்பி வைத்தேன். இப்போது அவனது உடலைக் கொண்டுவர எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. எனவே, கனடாவில் இருந்து பஞ்சாப்பிற்கு எனது மகனின் உடலைக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் உதவிட வேண்டும்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

பஞ்சாப்பைச் சேர்ந்த 19 வயது மாணவர் மாரடைப்பால் கனடாவில் உயிரிழந்த சம்பவம், கானூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x