பள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி... மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு!


நாடு முழுவதும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு 2024-ம் ஆண்டுக்கு படிப்பதற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.

இதற்கான கடைசி தேதி ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 25-ம் தேதி முடிந்த அவகாசம் தற்போது ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் ஆறாம் வகுப்பு சேர நவோதயா வித்யாலயா சமிதி (என்விஎஸ்) தேசிய அளவில் தேர்வு நடத்துகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு பிறகு இரண்டு நாட்கள் விண்ணப்பங்களை திருத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Cbseitms.rcil.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டதைக் குறிக்கும் உறுதிப்படுத்தல் அல்லது ஒப்புதலைப் மறக்காமல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

x