பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எப்போது? - வெளியானது அறிவிப்பு!


பள்ளிகள்

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

11, 12 ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ந்தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ந்தேதியும் காலாண்டு தேர்வுகள் துவங்கும், செப்டம்பர் 27 அன்று காலாண்டு தேர்வு முடிவடைகிறது.

அரசுப் பள்ளி சிறார்

தேர்வு முடிந்த பின்னர் செப்டம்பர் 28 ந்தேதி முதல் அக்டோபர் 2 வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ந்தேதி பள்ளிகள் திறக்கும் என்று பள்ளிக்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

x