10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு செப்டம்பர் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


சென்னை: தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நடப்பு கல்வி ஆண்டுக்கான (2024-25) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் நேரடி தனித் தேர்வர்களும், ஏற்கெனவே தேர்வெழுதி அறிவியல் பாட செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் தற்போது பயிற்சிக்கு பதிவு செய்ய வேண்டும். அதன்படி, தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி ரூ.125 கட்டணம் செலுத்தி செப்டம்பர் 2 முதல் 20-ம் தேதி வரையான காலகட்டத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பயிற்சி வகுப்பில் 80 சதவீத வருகைப் பதிவு இருக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள், மையம் போன்ற விவரங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்

x