பொறியியல் படிப்புகளுக்கான கேட் நுழைவுத்தேர்வு எழுத 28 முதல் விண்ணப்ப பதிவு


சென்னை: முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ‘கேட்’ நுழைவுத் தேர்வுக்கு பட்டதாரிகள் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுள்ள ஐஐடி உட்படமத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண்செல்லும். அதன்படி 2025-ம்ஆண்டுக்கான கேட் தேர்வு வரும்பிப்ரவரி 1, 2 மற்றும் 15, 16-ம்தேதிகளில் பாடப்பிரிவு வாரியாககாலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது. இந்தமுறை கேட் தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 24-ம்தேதி முதல் தொடங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்படி பட்டதாரிகள் விண்ணப்பிக்க ஆர்வமுடன் நேற்று வலைதளத்தில் காத்திருந்தனர். ஆனால்,விண்ணப்பப் பதிவானது ஆகஸ்ட்28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக ரூர்க்கி ஐஐடி தற்போதுஅறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://gate2025.iitr.ac.in/ எனும் வலைதளத்தில் சென்று செப்டம்பர் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனுடன் பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் சென்று பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

x