10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: ஆகஸ்ட் 29ம் தேதி வழங்கல்


சென்னை: இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 29ம் தேதி அந்தந்த பள்ளியில் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா (திங்கள்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி (வியாழக்கிழமை) அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக வழங்கப்படும்.

தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்" என்று செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

x