குரோம்பேட்டை ஐடிஐ-யில் மாணவர் சேர்க்கை: போக்குவரத்து கழகம் தகவல்


சென்னை: குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக முதுநிலை துணைமேலாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர போக்குவரத்து கழக (எம்டிசி) நிர்வாகத்தின்கீழ் செயல்படும் குரோம்பேட்டை தொழிற்பயிற்சி நிலையத் தில் (ஐடிஐ) 42-வது பேட்ச் வகுப்பு தொடங்கப்பட உள்ளது.

இங்கு 2 ஆண்டுகளுக்கான கம்மியர்(மோட்டார் வாகனம்) பயிற்சி வழங்கப் படுகிறது. இதில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது உச்சவரம்பு 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.10 ஆயிரம் கட்டணம்: பணியாளர்கள் தங்கள் பணிமனைகளில் இருந்து இதற்கான ஆவணங்களை பெற்று, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

எம்டிசி முன்னாள், இந்நாள் பணியாளர் களின் வாரிசுகளுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.