திண்டுக்கல் பள்ளியில் இந்தி தேர்வு எழுதிய 951 மாணவ, மாணவிகள்


திண்டுக்கல்லில் நடந்த இந்தி தேர்வை எழுதிய மாணவ, மாணவிகள். | படம்: நா.தங்கரத்தினம்.

திண்டுக்கல்: திண்டுக்கல் பள்ளியில் திருச்சி தக்‌ஷன பாரத் இந்தி பிரசார சபா சார்பில் இந்தி தேர்வு
ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தி தேர்வு எழுத மாவட்டத்தில் திண்டுக்கல்லில் மட்டும் மையம் அமைக்கப்பட்டிந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து 951 மாணவ, மாணவிகள் இந்தி தேர்வு எழுதினர். இதில் காலையில் நடந்த பிராத்மிக் தேர்வை 400 பேர் எழுதினர். மத்தியமா தேர்வை 299 பேரும், ராஷ்டிரபாஷா தேர்வை 252 பேரும் எழுதினர்.

திருச்சியை சேர்ந்த தக்‌ஷன பாரத் இந்தி பிரசார சபா நிர்வாகிகள் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

x