உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: விண்ணப்பிக்க ஜூன் 7 கடைசி நாள்


சென்னை: தமிழக அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்ட வகுப்புக்கான 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

மேற்கண்ட படிப்பில் சேர விரும்புவோர் www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ (அ) அஞ்சலிலோ, இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து, இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113, தொலைபேசி 044-22542992 என்ற முகவரியில் 2024 ஜூன் 7–ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதியும் உள்ளது.

x