தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர்கள் நியமனம்


சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த ஜூலை 8-ம் தேதி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், புதிதாக தரம் உயர்த்தப்பட்டுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் வழங்கக் கோரிக்கை பெறப்பட்டுள்ளது.

அதாவது, 2017-18, 2018-19மற்றும் 2023-24 ஆகிய கல்வியாண்டுகளில் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை என்பது தெரியவருகிறது. அதேநேரம் மாணவர்களின் நலன் கருதி கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவு அந்த பள்ளிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே, கடந்த 3 கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினிப் பிரிவில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை மாவட்ட அளவில் தொகுத்து அறிக்கையை இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்

x