வீடு தேடி வரும் அஞ்சல் வங்கி கணக்கு


வீடு தேடி வந்த அஞ்சல் வங்கி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வீட்டு வாசலுக்கே சென்று மாணவர்களுக்கு அஞ்சல் வங்கி கணக்குகளை முத்துக்கருப்பன் என்ற தபால்காரர் துவக்கி கொடுத்து வருகின்றார். பேனா இல்லை; பேப்பர் இல்லை.

இதுகுறித்து இப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் இது குறித்து பேசும்போது, ‘‘எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை பெற வங்கி கணக்கு ஆரம்பிக்க பெரிதும் சிரமப்பட்டனர். வங்கியில் குறைந்தது 1000 ரூபாய் இருந்தால்தான் வங்கி கணக்கு துவக்க முடியும். கரோனா நேரமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி , வீட்டிலேயே வந்து அஞ்சல் வங்கி கணக்கு ஐ.எப்.எஸ்.சி.கோடுடன் துவக்கி கொடுக்க எங்கள் பகுதி தபால்காரர் முத்துக்கருப்பனை அணுகினோம்.அவரும் ஆர்வமுடன் வந்து எங்கள் பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஆதார் எண்ணை மட்டுமே பெற்றுக்கொண்டு, பேப்பர், பேனா இல்லாமல் மிக குறைவான இருப்பு தொகை ரூபாய் 100 மட்டுமே பெற்றுக்கொண்டு அஞ்சல் வங்கி கணக்கை துவக்கி கொடுத்தார்!’ என்று தெரிவித்தார்.

வீடு தேடி வந்த தபால்காரர்

இந்த செயல்முறையில் கியூ. ஆர். கோடு கொண்ட அட்டை வாயிலாக கணக்கு செயல்படுத்தப்பட்டு அனைத்து பரிவர்த்தனைகளும் கைவிரல் ரேகை வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த பகுதி தபால்காரர்கள் உங்கள் வீட்டுக்கே வந்து வங்கி சேவை அளிப்பார்கள் என்றும் இந்தியாவின் எந்தவொரு வங்கி கணக்கிற்கு எந்த நேரத்திலும் பணம் செலுத்தவும், பெறவும் முடியும்.என்றும் இதன் சிறப்புகள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளனர் ஆசிரியர்கள்.

இப்படி கரோனா நேரத்தில் மாணவிகளின் வீடுகளுக்கே சென்று அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி கொடுப்பது பெற்றோர்களிடம் அதிக பாராட்டை பெற்றுள்ளது. இதற்கான விழிப்புணர்வினை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துமீனாள், முத்துலெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

x