தென்காசி: சேர்ந்தமரம் அருகே உள்ள வலங்கப் புலி சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி மகேஷ் (30). குடும்ப பிரச்சினை காரணமாக மகேஷ் தனது குழந்தைகள் சுதர்சன் (6), முகிலன் (2) ஆகியோருக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷம் குடித்துள்ளார்.
இதையறிந்த உறவினர்கள், 3 பேரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சேர்ந்தமரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.