சிவகங்கை: புதுவயலைச் சேர்ந்த பெயின்டர் சேகர் (61). இவர் 2016ம் ஆண்டு டிச.31-ம் தேதி 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சேகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.