ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
அரக்கோணம் அடுத்த பெருமூச்சி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (30). இவர். கடந்த 2018ம் ஆண்டு 2 - ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் மோகன் ராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் விசாரணை செய்து மோகன் ராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் சார்பில் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.எம் சங்கர் ஆஜரானார்.