பரமக்குடியில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: கூலி தொழிலாளி போக்சோவில் கைது


ராமநாதபுரம்: பரமக்குடியில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நெம்மேனி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (31). கூலித் தொழிலாளியான இவர் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனை கடந்த 25-ம் தேதி இரவு உழவர் சந்தை பகுதிக்குள் அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதேபோல் சரவணக்குமார் பலமுறை சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில், பரமக்குடி நகர் போலீஸார் சரவணக்குமார் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.

x