சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடி​யாது: உயர் நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்!


சென்னை: மனஉளைச்சல் மற்றும் மிரட்டல் காரண​மாகவே விஜயலட்​சுமி புகாரை வாபஸ் பெறு​வதாக தெரி​வித்​துள்ளார். சீமானுக்கு எதிரான பாலியல் குற்​றச்​சாட்டு மிகவும் தீவிர​மானது. இதில் புகாரை வாபஸ் பெற்​றாலும் கூட சமரசம் செய்து கொள்ள முடி​யாது என உயர் நீதி​மன்றம் தீர்ப்​பளி்த்​துள்ளது.

நடிகை விஜயலட்​சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை, உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த பிப்​.17-ம் தேதி விசா​ரணைக்கு வந்தது. அப்போது சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடி​யாது என மறுப்பு நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இது தொடர்பாக நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் பிறப்​பித்​துள்ள விரிவான உத்தர​வில் கூறி​யிருப்​ப​தாவது, ‘சீமான் இயக்கிய படத்​தில் நடிகை விஜயலட்​சுமி நடித்​துள்ளார். அதில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக தனது குடும்ப பிரச்​சினை​களுக்கு தீர்வு காண உதவி கேட்டு சீமானை விஜயலட்​சுமி அணுகி​யுள்​ளார். அப்போது விஜயலட்​சுமியை திரு​மணம் செய்து கொள்​வதாக உத்தர​வாதம் அளித்​துள்ள சீமான். அவருடன் பாலியல் ரீதியாக உறவு கொண்டு திரு​மணத்​துக்கு மறுத்து மிரட்​டலும் விடுத்​துள்ளார்.

அதன்​பிறகே சீமானுக்கு எதிராக அவர் போலீ​ஸில் பாலியல் புகார் அளித்​துள்ளார். பதிலுக்கு சீமான் தரப்​பில் இருதரப்பு சம்மதத்​துடன் நடைபெறும் உறவு பாலியல் குற்​ற​மா​காது என்றும், 2011-ம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்​சுமி 2012-ம் ஆண்டே வாபஸ் பெற்று ​விட்​ட​தாக​வும் வாதிடப்​பட்​டது. ஆனால், அனைவரது முன்னிலை​யிலும் தன்னை திரு​மணம் செய்து கொள்​வதாக சீமான் அளித்த உத்தர​வாதத்தை நம்பி அந்த புகாரை வாபஸ் பெற்​றதாக விஜயலட்​சுமி திரு​வள்​ளூர் மகளிர் நீதி​மன்​றத்​தில் வாக்​குமூலம் அளித்​துள்ளார்.

அதேபோல், சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெறு​வதாக வழக்​கறிஞரிடம் விஜயலட்​சுமி அளித்த கடித​மும், சம்பந்​தப்​பட்ட காவல் ஆய்வாள​ருக்கு சென்​றடைய​வில்லை. அதனால் அந்த வழக்கு முடித்து வைக்​கப்​படாமல் நிலுவை​யில் இருந்து வந்துள்ளது. இந்த வழக்​கில் 15 சாட்​சிகளிடம் போலீ​ஸார் வாக்​குமூலம் பெற்றுள்ளதாக அரசு தரப்​பில் தெரிவிக்கப்பட்டது. இருவருக்​குமிடையே காதல் இல்லை. உதவி கேட்டு சென்​ற​போது திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி விஜயலட்​சுமி​யிடம் சீமான் உறவு கொண்​டுள்​ளார். சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றிய​தால் விஜயலட்​சுமி சுமார் 7 முறை கருக்​கலைப்பும் செய்​துள்ளார்.

அது​மட்டுமின்றி விஜயலட்​சுமி​யிட​மிருந்து பெரும் தொகை​யை​யும் சீமான் பெற்றுள்​ளார். மனஉளைச்சல் மற்றும் மிரட்டல் காரண​மாகவே விஜயலட்​சுமி புகாரை வாபஸ் பெறு​வதாக தெரி​வித்​துள்ளார். சீமானுக்கு எதிரான பாலியல் குற்​றச்​சாட்டு மிகவும் தீவிர​மானது. இதில் புகாரை வாபஸ் பெற்​றாலும் கூட சமரசம் செய்து கொள்ள முடி​யாது. கடந்த 2023 வரை இருவருக்​குமிடையே ஏதோ ஒருவகை​யில் தொடர்பு இருந்து வந்துள்ளது. எனவே சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடி​யாது’ என தனது உத்தர​வில் நீதிபதி குறிப்​பிட்​டுள்​ளார்​

x