மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய 65 வயது முதியவர் கைது: புதுச்சேரி அதிர்ச்சி


புதுச்சேரி: கிருமாம்பாக்கம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 38 வயது பெண் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் வயிற்று வலி காரணமாக மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை மருத்துவர் பரிசோதித்த நிலையில் அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவர், மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தேவராசு (65) என்பவர், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேவராசுவை போலீஸார் கைது செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

x